மாவட்டத்தில் 77.96 சதவீதம் வாக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 77.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 77.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
 விழுப்புரத்தில் 78.22 சதவீதம்: விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திண்டிவனம் சட்டப் பேரவைத் தொகுதியில் 78.66 சதவீதமும், வானூர் தொகுதியில் 79.85 சதவீதமும், விழுப்புரம் தொகுதியில் 75.37 சதவீதமும், விக்கிரவாண்டி தொகுதியில் 79.57 சதவீதமும், திருக்கோவிலூர் தொகுதியில் 75.51 சதவீதமும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் 80.41 சதவீதமும் மாலை 6 மணி நிலவரப்படி வாக்குகள் பதிவாகியிருந்தன. இதன் மூலம் விழுப்புரம் ( தனி) மக்களவைத் தொகுதியில் மொத்தம் 78.22 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
 கள்ளக்குறிச்சியில் 78.38 சதவீதம்: இதேபோல, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ரிஷிவந்தியம் சட்டப் பேரவைத் தொகுதியில் 77.76 சதவீதமும், சங்கராபுரம் தொகுதியில் 78.32 சதவீதமும், கள்ளக்குறிச்சி தொகுதியில் 78.32 சதவீதமும், சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி தொகுதியில் 76.64 சதவீதமும், ஆத்தூர்
 தொகுதியில் 76.81 சதவீதமும், ஏற்காடு தொகுதியில் 81.93 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 78.38 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது.
 மேலும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதியில் 76.05 சதவீதமும், மயிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 77.80 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
 இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 77.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்று மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com