அனைத்து மக்கள் விடுதலை கட்சி தர்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் அனைத்து மக்கள் விடுதலை கட்சி சார்பில் திங்கள்கிழமை தர்னா நடைபெற்றது. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் அனைத்து மக்கள் விடுதலை கட்சி சார்பில் திங்கள்கிழமை தர்னா நடைபெற்றது. 
போராட்டத்துக்கு கட்சியின் மாநில செயல் தலைவர் டி.கொளஞ்சி தலைமை வகித்தார். அனைத்து தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஜி.ஆர்.ராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜெய்சங்கர், மாநில அமைப்பாளர் ஆர்.ராஜகீர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி ஜி.சசிகலா வரவேற்றார். 
அனைத்து மக்கள் 
விடுதலைக் கட்சித் தலைவர் பி.சி.பூபதி கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் அ.தேவராஜ், மாநில செயலர்கள் எஸ்.ஆர்.அம்பேத்கர், ந.கி.ராமலிங்கம், ஜி.கே.முருகன் உள்ளிட்டோர் பேசினர். 
தர்னாவில், தமிழகத்தில் உள்ள 15,622 ஊர்க்காவல்படை வீரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கடலூர் மாவட்ட தலைவர் எம்.சுப்புடு, கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் அ.சபாநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில மகளிர் அணி அ.இந்திராணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com