அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

மணம்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் டி.தேவனூரில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மணம்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் டி.தேவனூரில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலர் எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே.என்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாணவரணி ஒன்றியச் செயலர் கே.எஸ்.துரை வரவேற்றார். 
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற அமைச்சர் சி.வி.சண்முகம், தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான இரா.குமரகுரு, விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கிப் பேசினர். 
மாவட்ட பிரதிநிதிகள் மகாராஜன், தாமோதரன், கலாவதி குமார், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஊராட்சிச் செயலர் ஏழுமலை,  கிளைச் செயலர்கள் தங்க.கோவிந்தன், கணேசன், ம.க.முருகன், சீனிவாசன், ரவி, முரளி, ஆறுமுகம், துரைக்கண்ணு உள்பட பலர் 
கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com