பள்ளி ஆண்டு விழா

சங்கராபுரத்தில் உள்ள வள்ளலார் பள்ளியின் 35-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்கராபுரத்தில் உள்ள வள்ளலார் பள்ளியின் 35-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வள்ளலார் மன்றச் செயலர் ரா.நாராயணன் தலைமை வகித்தார். இன்னர்வீல் சங்கத் தலைவர் கோ.சரவணதேவி, ஓய்வூதியர் சங்கத் தலைவர் கு.கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தாளாளர் இராம.முத்துக்கருப்பன் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியை சி.வள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜி.வேங்கடநாராயணன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். விழாவில், காவல் உதவி ஆய்வாளர் 
தே.சிவச்சந்திரன், மாற்றுடை, கராத்தே போட்டி, பரத நாட்டியம், பட்டிமன்றம், ஓரங்க நாடகம், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி, பரிசு வழங்கினார்.
வியாபாரிகள் சங்கச் செயலர் கோ.குசேலன், அரிமா மாவட்டத் தலைவர் க.வேலு, ஜனனி மகாலிங்கம், மருந்து வணிகர் சங்கத் தலைவர் மு.அருணாசலம், வாசவி சங்கத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மோட்டார் வாகன சங்க நிர்வாகிகள் ராஜா, அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி முன்னாள் தலைவர் அ.மூர்த்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com