காய்கனி பதனிடுதல் பயிற்சி

திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் காய்கள், பழங்கள் பதனிடுதல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் காய்கள், பழங்கள் பதனிடுதல் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
 முகாமுக்கு, கல்லூரிச் செயலர் ஈ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.முஸ்தாக்
 அகமது, முதல்வர் டி.எஸ்.வீரமணி, நிர்வாக அலுவலர் ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேதியியல் துறைத் தலைவர் ஜி.மணிகண்டன் வரவேற்றார்.
 முகாமில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எஸ்.கண்ணன், கடலூர் மண்டல வேளாண் உதவி இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று காய்கள், பழங்களை எவ்வாது பதனிடுவது, மண்புழு உரம் தயாரிப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
 ஏற்பாடுகளை இயற்பியல் துறைத் தலைவர் ஜெ.சந்திரசேகர் செய்திருந்தார். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் பி.புருஷோத்தமன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com