விழுப்புரம்

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

DIN

கள்ளக்குறிச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ராமச்சந்திரன் நகர் 5ஆவது குறுக்குச் சாலையில் வசிப்பவர் அன்பழகன் (72), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் ஜோதிடம் பார்ப்பதற்காக கடந்த 19ஆம் தேதி மனைவி தனபாக்கியத்துடன் வெளியூருக்குச் சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT