கார் மோதியதில் சிறுவன் சாவு

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் வசிப்பவர் செங்கோடன் மகன் பாண்டியராஜன் (34). 
இவரது நண்பர் கள்ளக்குறிச்சியை அடுத்த மிளகாய்த்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (26), அவரது மகன் ஹரிபிரசாந்த்(4). இவர்கள் மூவரும் மோட்ஹடார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். 
அம்மன் நகர் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில் மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஹரிபிரசாந்த் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.  விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com