விழுப்புரம்

கல்லைத் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

DIN

கல்லைத் தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி சேலம் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கல்லைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.வ.புகழேந்தி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் செ.வ.மகேந்திரன் வரவேற்றார்.
 ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சா.சண்முகம் தகையணங்குறுத்தல் என்ற திருக்குறள் அதிகாரத்துக்கு பொருள் விளக்கம் கூறினார். நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ.இலட்சுமிபதி பெண்ணிற் பெருந்தக்க யாவுள எனும் தலைப்பில் பேசினார்.
 ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியை தேவநேய சித்திரச் செல்வி, வடசெட்டியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.லட்சுமி உள்ளிட்டோருக்கு சாதனைப் பெண்மணி விருதுகளை அறிவுத் திருக்கோயில் நிர்வாக அறங்காவலர் சி.கோவிந்தசாமி வழங்கினார்.
 தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற கல்லைத் தமிழ்ச் சங்க செயலாளர் செ.வ.மதிவாணனுக்கு சங்க துணைச் செயலாளர் இல.அம்பேத்கார் உள்ளிட்ட தமிழ்ப் புலவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
 கல்லை கவிஞர் ஜி.கோவிந்தராசன் தலைமையில் உலக மகளிரைப் போற்றுவோம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
 பெ.செயராமன் கவிதை பாடினார். துணைச் செயலாளர் செ.வ.மகேந்திரன் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியான், கே.வி.ஆர்.ஜெயபால் உள்ளிட்ட பலர் பேசினர். துணைச் செயலாளர் இராம.முத்துசாமி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT