பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செஞ்சியில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் ஆத்மலிங்கம் தலைமை வகித்தார். செயலர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். மூத்த வழக்குரைஞர்கள் கிருஷ்ணன், பிரவின், சுப்பிரமணி, நடராஜன், கண்ணதாசன், விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.