ரூ.1,100 லஞ்சம் பெற்ற வழக்கு: ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.வுக்கு 9 ஆண்டு சிறை

பிறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.1,100 லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

பிறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.1,100 லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
 கண்டமங்கலம் அருகே உள்ள நவம்மாள் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ஆறுமுகம் (48). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், தனது மகன் சத்தியமூர்த்தியை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக பிறப்புச் சான்றிதழ் வேண்டி வருவாய்த் துறையில் விண்ணப்பித்தார். அப்போது அங்கு கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய ஹரிதாஸ் (64) பிறப்புச் சான்றிதழ் வழங்க ஆறுமுகத்திடம் ரூ.1,400 லஞ்சமாகக் கேட்டுள்ளார். பின்னர், ரூ.1,100 லஞ்சம் கொடுத்தால்தான் வேலை முடியும் என்றும் கூறியுள்ளார்.
 இதுகுறித்து விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஆறுமுகம் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸாரின் வழிகாட்டுதலின் பேரில் ரூ.1,100 லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் ஹரிதாஸிடம் ஆறுமுகம் 21.11.2011 அன்று வழங்கினார். அப்போது ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீஸார் ஹரிதாûஸ கைது செய்தனர்.
 இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஹரிதாஸýக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com