நெடுமானூரில் பாரதியார் தமிழ்ச் சங்கம் தொடக்கம்

சங்கராபுரம் அருகே நெடுமானூரில் பாரதியார் தமிழ்ச் சங்க தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.


சங்கராபுரம் அருகே நெடுமானூரில் பாரதியார் தமிழ்ச் சங்க தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் ரா.கதிர்வேல் தலைமை வகித்தார். வள்ளலார் மன்றச் செயலர் ரா.நாராயணன், ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் மு.கலைச்செழியன், தலைமை ஆசிரியர்கள் மு.நாகலிங்கம், அ.சுனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் ரா.செல்வராஜ் வரவேற்றார்.
அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை அகில இந்திய இணைச் செயலர் உதியன் சங்கத்தைத் தொடக்கி வைத்தார். தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் ரா.துரைமுருகன், சங்கப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
விழாவில் சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க.செம்பியன், சங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ம.சுப்பராயன், கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலர் செ.வ.மதிவாணன், திருக்குறள் பேரவைச் செயலர் ஆ.இலட்சுமிபதி, வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன் ஆகியோர் சங்க புதிய நிர்வாகிகளைப் பாராட்டிப் பேசினர்.
ஸ்டார் கிளப் வட்டாரத் தலைவர் அ.முகமத்ரபி, அரிமா மாவட்டத் தலைவர்கள் ஜனனி மகாலிங்கம், வ.விஜயகுமார், கவிஞர் கலிய.செல்லமுத்து, வேளாண் உதவி அலுவலர் ச.சதீஷ்மன்னன், திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தராஜன், விருகாவூர் தமிழ்ச் சங்கத் தலைவர் பிச்சைப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் பெ.கண்ணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com