என் மகனுக்கு இரண்டு தாரம் என்றும் ராகு, கேது தோஷம் உள்ளதாகவும் ஜோதிடர் கூறுகிறார். காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய மனைவி அமைவார்? பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டா? வேறு பாரிகாரம் செய்ய வேண்டுமா?  - வாசகி, ஆம்பூர்

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதி குருபகவான் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், துலாம் ராசி. களத்திர ஸ்தானாதிபதி குருபகவான் களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மேலும் குருபகவானின் பார்வை குடும்பாதிபதியின் மீதும் பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் லாபாதிபதியின் மீதும் படிவதால் அவரின் வாழ்க்கை சீராகவே செல்லும். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பதால் மாளவிகா யோகமும் உண்டாகிறது. தற்சமயம் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற தைரியாதிபதியுடன் இணைந்திருக்கும் லக்னாதிபதியின் தசை நடக்கிறது. அவருக்கு இருதார தோஷம் இல்லை. அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். இந்த காலகட்டத்தில் பதவி உயர்வும் கிடைத்துவிடும். சர்ப்ப சாந்தி செய்தால் மட்டுமே போதுமானது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com