நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 93 கோடி டாலர் அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 93 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 93 கோடி டாலர் அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 93 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
 அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அதிகரிப்பைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 93 கோடி டாலர் (ரூ.6,510 கோடி) உயர்ந்து 39,371 கோடி டாலரை (ரூ.27.56 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
 இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 79 கோடி டாலர் குறைந்து 39,278 கோடி டாலராக காணப்பட்டது.
 மதிப்பீட்டு வாரத்தில் ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 78 கோடி டாலர் உயர்ந்து 36,848 கோடி டாலராக காணப்பட்டது. தங்கத்தின் கையிருப்பு 15 கோடி டாலர் அதிகரித்து 2,115 கோடி டாலராக இருந்தது. சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் கையிருப்பு 25 லட்சம் டாலர் குறைந்து 145 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 44 லட்சம் டாலர் குறைந்து 262 கோடி டாலராகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நடப்பாண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்று சாதனை அளவாக 42,602 கோடி டாலரை (ரூ.29.82 லட்சம் கோடி) எட்டியிருந்தது. அதன் பிறகு 3,100 கோடி டாலர் அளவுக்கு கையிருப்பானது சரிவைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com