இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி நடப்பு சந்தைப் பருவத்தில் 3.15 கோடி டன்னாக குறையும் என இந்திய சர்க்கரை ஆலைககள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: இம்மாதத்தில் தொடங்கிய 2018-19 சந்தைப் (அக்.,-செப்.,) பருவத்தில் சர்க்கரை உற்பத்தி 3.5 கோடி டன்னாக இருக்கும் என கடந்த ஜூலையில் சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு மதிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், பருவம் தவறிய மழை, பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களால் சர்க்கரை
உற்பத்தி 3 சதவீதம் குறைந்து 3.15 கோடி டன்னாக மட்டுமே இருக்கும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரும்பு சாகுபடி அதிகமாக பாதிப்புக்குள்ளானதே முக்கிய காரணம்.
2018-19 காலத்தில் சர்க்கரை இருப்பு 4.27 கோடி டன்னாக இருக்கும்.
அதேசமயம், உள்நாட்டில் அதற்கான தேவை 2.5-2.6 கோடி டன் என்ற அளவிலேயே காணப்படும். சர்க்கரை ஆலைகள் 40-50 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்தால் கூட கையிருப்பானது 1.1-1.3 கோடி டன் என்ற கணிசமான அளவிலேயே காணப்படும் என்று சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.