அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டின் மொத்த வாகன எண்ணிக்கையில் மின்வாகனங்களின் பங்களிப்பு 15 சதவீதமாக இருக்க வேண்டுமென இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
மின்சார கார்கள் மட்டுமல்லாமல், பிற வாகனங்களும் மின்சாரத்தால் - பேட்டரியால் - இயங்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்கிறார் அவர். "மின்சார வாகனங்களுக்குத் தேவைப்படும் உயர்திறன் பேட்டரி முதல், மின் சக்தியால் இயங்கும் வாகனங்கள் வரை, அனைத்து கட்டங்களிலும் இந்தியா முன்னிலை வகிக்கும் காலம் வர வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும்.
தனி நபர்கள் தங்கள் சொகுசு வாகனங்களை விடுத்து, பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தைத்தான் பயன்படுத்துவோம் என்று வலியுறுத்தும் அளவுக்கு அதன் தரத்தை மேம்படுத்தப் பாடுபட வேண்டும்' என்று அண்மையில் நடைபெற்ற மோட்டார் வாகன மாநாட்டில் அவர் பேசியுள்ளார்.