பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் பணிபுரிந்த 14 பொது மேலாளர்கள் செயல் இயக்குநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய பணியாளர் அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன்படி, பேங்க் ஆஃப் பரோடாவின் செயல் இயக்குநர்களாக சாந்தி லால் ஜெயின், விக்கிரமாதித்யா சிங் கிச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக இவர்கள் மூன்றாண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பர். செயல்திறன் நன்கு இருக்கும்பட்சத்தில் மேலும், இரண்டு ஆண்டுக்கு அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.