விமான சேவை வர்த்தகத்தில் ஏர் இந்தியா நிறுவனமும், போலந்தின் எல்ஓடி போலிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து செயல்படும் வகையில் கோட் ஷேர் எனப்படும் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்த ஏற்பாட்டின்படி, இரு நிறுவனங்களும் தங்களுக்கிடையே விமான சேவை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளமுடியும். அதன்படி, வர்ஸா-ஃபிராங்ஃபுர்ட் விவி செக்டார் வழித்தடத்தில் இயக்கப்படும் எல்ஓடி விமானங்களை ஏர் இந்தியா பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டம் செப்டம்பர் 24 முதல் அமலுக்கு வந்துள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற மேலும் பல ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.