மத்திய அரசின் பங்கு விற்பனை இலக்கு எட்டப்பட வாய்ப்பில்லை என தரக் குறியீட்டு நிறுவனமான கேர் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது:
பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், தற்போது நிதி சந்தையில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையால் இலக்கில் ரூ.20,000 கோடி வரை குறையும் நிலை காணப்படுகிறது. எனவே, பங்கு விலக்கல் மூலம் மத்திய அரசு நடப்பாண்டில் ரூ.60,000 கோடியை மட்டுமே திரட்டிக் கொள்ளும் என கேர் தெரிவித்துள்ளது.