வர்த்தகம்

எத்தனால் எரிபொருளில் இயங்கும் முதல் பைக்: டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்

DIN


டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் முதல் எத்தனால் டிவிஎஸ் அப்பாச்சி பைக் தில்லியில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 
இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இப்புதிய பைக்கை சந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவர் வேணு ஸ்ரீநிவாஸன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 எஃப்ஐ இ100' பைக்கை நிறுவனம் முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1.2 லட்சமாகும். 
எத்தனால் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ள கரும்பு அதிகம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகத்திலிருந்து இப்புதிய வகை மோட்டார்சைக்கிளின் விற்பனை தொடங்கப்படவுள்ளது. 
இந்தியாவில், தற்போதைய நிலையில் எத்தனால் எரிபொருள் நிலையங்கள் எங்கும் அமைக்கப்படவில்லை. இருப்பினும், எத்தனால் எரிபொருள் நிரப்பும் மையங்களை திறக்குமாறு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தை மத்திய நிதி அமைச்சர் கேட்டுக் கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின்சாரம், ஹைபிரிட்' உள்ளிட்ட மாற்று எரிபொருளை நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய  இருசக்கர வாகன துறை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், எத்தனால் பைக்குகள் எங்களின் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT