பிஏசிஆர் தனியார் ஐடிஐ-க்கு அகில இந்திய அளவில் 3-ஆவது இடம்

அகில இந்திய அளவில் சிறந்த தொழில் பயிற்சி மையத்துக்கான (ஐடிஐ) 3-ஆவது இடத்தை ராம்கோ சிமென்ட் நடத்தும் பிஏசிஆர் தனியார் ஐடிஐ பிடித்தது.
பிஏசிஆர் தனியார் ஐடிஐ-க்கு அகில இந்திய அளவில் 3-ஆவது இடம்


அகில இந்திய அளவில் சிறந்த தொழில் பயிற்சி மையத்துக்கான (ஐடிஐ) 3-ஆவது இடத்தை ராம்கோ சிமென்ட் நடத்தும் பிஏசிஆர் தனியார் ஐடிஐ பிடித்தது.
இந்திய அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் தனியார் ஐடிஐ-க்களை தேர்ந்தெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டது. அதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 33 தனியார் ஐடிஐ-க்களில் 73.7 சதவீத மதிப்பெண்களைப் பெற்று ராம்கோவின் பிஏசி ராமசாமி ராஜா ஐடிஐ 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடந்த 2010-ஆம் ஆண்டு மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் பிஏசிஆர் ஐடிஐ-யை ராம்கோ சிமென்ட்ஸ்  தொடங்கியது. சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் தொழில்நுட்ப திறனை வெளிக்கொணரும் வகையில் இந்த ஐடிஐ பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகளை நடத்தி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com