அசோக் லேலண்ட் அலுவலகத்துக்கு பசுமை விருது

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சென்னை அலுவலக கட்டடத்துக்கு அமெரிக்க கிரீன் பில்டிங் கவுன்சில் வழங்கும் பசுமை விருது கிடைத்துள்ளது. 
அசோக் லேலண்ட் அலுவலகத்துக்கு பசுமை விருது


அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சென்னை அலுவலக கட்டடத்துக்கு அமெரிக்க கிரீன் பில்டிங் கவுன்சில் வழங்கும் பசுமை விருது கிடைத்துள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சென்னை அலுவலக கட்டடத்துக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்க கிரீன் பில்டிங் கவுன்சில் வழங்கும் லீட் தங்க சான்றிதழ் வழங்கப்பட்டது. 
சுற்றுப்புறச் சூழலுக்கேற்ற கட்டட வடிவமமைப்புக்காக இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மேலும் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டதையடுத்து, நிறுவனம் தற்போது லீட் வி4.1 பிளாட்டினம் சான்றிதழை தட்டிச் சென்றுள்ளது.
இந்தியாவில் கார்ப்பரேட் அலுவலகமொன்று பிளாட்டினம் சான்றிதழைப் பெறுவது இதுவே முதல் முறை. மேலும்,  உலளவில் இது நான்காவது சான்றிதழ் ஆகும் என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com