மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலை திறப்பு அண்மையில் நடைபெற்றது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை உள்ளிட்ட துறைகளில் வெற்றி பெற்று வரும் உலகளவில் பிரபலமானவர்களுக்கு மெழுகினால் ஆன ஆளுயர சிலை நிறுவப்படுகின்றன.
லண்டன், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகங்களில் மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகங்களின் பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த விஐபிகளின் சிலை அருகே நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள்.
பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஆளுயர மெழுகுச் சிலை திறக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா ஷர்மாவின் மெழுகுச் சிலையில் கையில் ஒரு விலையுயர்ந்த மொபைல் ஃபோன் ஒன்று இயங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவின் கையில் உள்ள மொபைல் போனின் மூலமாகவே ‘செல்பி’ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யும் நவீன வசதியுடன் இந்தச் சிலை அமைந்துள்ளது. மேலும் அனுஷ்காவின் குரல் பதிவு செய்யப்பட்டு அது காண்போரை வரவேற்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமையான இத்தகைய வசதிகள் முதன்முறையாக மெழுகுச் சிலைகளை அமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.