இன்று உலக தாய் மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
உயிரே உன்னை தமிழ் என்பதா?
தமிழே உன்னை உயிர் என்பதா?
இசையில் மெய் மறந்தாய்
எழுத்தில் உயிர்மெய் கலந்தாய்
இப்படி தொடங்குகிறது இந்த தமிழ் ஆன்தெம் பாடல். எல்.கே.ஜி படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை ஒரு முறை கேட்டால் போதும், அடிக்கடி கேட்கத் தொடங்கிவிடுவோம்.
கவிஞர் பா.விஜயின் அற்புத வரிகளில் சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயியின் குரல் வளத்தில் இந்தப் பாடலைக் கேட்கையில் வேற்று மொழியினரைக் கூட ரசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்பாடலின் இன்னொரு சிறப்பு, அதன் நடுவே 'நீராருங் கடலுடத்த நிலமடந்தை’ எனத் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம்பெறுகிறது. இமையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் இந்தப் பாடல் தமிழர் ஒவ்வொருவரின் விருப்பப் பாடலாக அமையும். இப்பாடலின் காணொளி:
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!