பெண்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்ல பயப்படும் சூழல் இன்றும் நிலவுகிறது. பெண்களுக்கு ஒரு ரிலீஃப் தேவைப்படுகிறது. பெண்கள் க்ரூப்பாக பேசும் போது தங்களுடைய பிரச்னைகளுக்கு வடிகாலாக இருப்பது பேச்சு மட்டுமே. பேசி, சிரித்து ரிலாக்ஸ் ஆகிடுவாங்க. மனதில் இருப்பதை வெளியே கொட்டினாலே ரிலீஃப் தான்.
பெண்களுக்கு பொறுப்பு அதிகம். வாழ்க்கையில் பாதி நேரம் அதிலே செல்வாகிறது. இதுல நட்பு எல்லாம் இரண்டாம்பட்சம் தான். அதனாலே அவர்களுடைய எமோஷன்ஸ் எல்லாவற்றையும் மனதுக்குளே வைத்து மருகுவார்கள். அதனாலேயே ஒரு கட்டத்தில் மன அழுத்தம் அதிகரித்து உடைந்து போவார்கள்.
இந்த படம் என்ன சொல்லுதுன்னா, 'நீங்க உங்க சந்தோஷத்தை விட்டு தரக் கூடாது. உங்களை முதல்ல லவ் பண்ணுங்க. ஓபனாக இருங்க. நான் இப்படித்தான் என்று சொல்லுங்கள். இது என்னுடைய கருத்து. இது என்னுடைய எமோஷன். இது உனக்கு பிடிச்சிருந்தா என்னோட இரு. இல்லைன்னா போயிட்டா இரு’
ஒரு பெண் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையா பேசும் போது சமூகம் அவர்களை அங்கீகரிக்கத் தொடங்கும்.
சினிமா எக்ஸ்ப்ரஸ் லைட்ஸ் ஆன் பகுதிக்காக சுதர் ஸ்ரீநிவாஸனின் அனிதா உதீப்பை சந்தித்த நேர்காணலின் முழு காணொலியைக் காண
பகுதி 1
பகுதி 2