இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: ரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை

சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியும் விருப்பமும்
இன்றைய வேலைவாய்ப்பு செய்தி: ரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை


சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 18

பணி: அலுவலக உதவியாளர்

வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் கோருபவர்களுக்கு நடைமுறையில் அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயாரித்து முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பதவித்தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி, தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், எழும்பூர், சென்னை - 600 008. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.03.2019 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/OA%20Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com