வேலைவாய்ப்பு

தமிழக அரசில் குரூப்-1 அதிகாரி வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! 

ஆர். வெங்கடேசன்


தமிழக அரசில் நிரப்பப்பட உள்ள உதவி ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி, உதவி ஆணையர், துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை), மாவட்ட பதிவாளர், உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரி என 139 குரூப்-1 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. அரசு அதிகாரி பணியையே குறிக்கோளாக கொண்டுள்ள தமிழக இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மொத்த காலியிடங்கள்: 139 

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பதவி: Deputy Collector  - 27
பதவி: Deputy Superintendent of Police  - 56
பதவி: Assistant Commissioner (C.T.)  - 11
பதவி: Deputy Registrar of Co-operative Societies - 13
பதவி: District Registrar  - 07
பதவி: Assistant Director of Rural Development - 15
பதவி: District Employment Officer - 08
பதவி: District Officer (Fire and Rescue Services)  - 02

சம்பளம்: மாதம் ரூ.56100 - 1,77,500 

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 37 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உதவி ஆணையர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருபவருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

கட்டணம் விவரம்: முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.100 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.150 என மொத்தம் ரூ.350 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவுக் கட்டண முறையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.150 செலுத்த தேவையில்லை. சில பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு மையம்: சென்னையில் மட்டும் தேர்வு நடத்தப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnspc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.02.2019 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2019 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 03.03.2019 அன்று நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு தேதி  பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கு கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

முயற்சியும், பயிற்சியும் தொடர்சியாக இருந்தால் முடியாதது எதுவுமில்லை. வெற்றி பெற வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

SCROLL FOR NEXT