இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இளையராஜாவின் 'இசை கொண்டாடும் இசை' என்ற பெயரிலான பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பின்னணிப் பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்டோர் பங்கேற்று பாடி அசத்தினர். மெர்குரி சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு 'தினமணி' மற்றும் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மீடியா பார்ட்னர்களாக இருந்தனர்.