ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதேபோல் முக்கடல் சங்கமம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்க்கு தர்ப்பணம் செய்து வந்தனர்.