நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உயிரிழந்தோருக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.