மும்பையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், தற்போது பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக குர்லா உள்ளிட்ட பகுதிகளிலும், தானே உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.