சென்னை நகரத்தின் தாகத்தை தணித்து வரும் ஏரிகளில் ஒன்று போரூர் ஏரி. ஏரிகள் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிப்பதுடன், குடிநீர் வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை, வீட்டு மனைப் பெருக்கம் , சென்னை நகரின் குடிநீர் தேவையை ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் நிலையில், வருண பகவானை நினைத்து ஏங்க வைக்கும் நிலையில் தற்போது உள்ள போரூர் ஏரி.