பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் தில்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதைதொடர்ந்து அவரது உடலுக்கு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தில்லி முதல்வர் கெஜ்ரிவால், பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.