கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு விழுந்ததில் மின்கம்பங்களும் சாய்ந்தன. தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம், காளகஸ்திநாதபுரம், கீழையூர், ஆக்கூர், சங்கரன்பந்தல் ஆகிய பகுதிகளில் சம்பா நடவு செய்யப்பட்டு நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.