தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக கையாளப்பட்டு தீயணைப்பு வண்டி, ஆம்புலன்சுகள், தீயணைப்பு கருவிக ஆகியவற்றுக்கான தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன. அனைத்து பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பட்டாசு விற்பனை தொடங்கியது. பண்டிகையையொட்டி, தீவுத்திடலில் சுமார் 70 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.