இயற்கை மனித குலத்துக்கு வழங்கியுள்ள அழகான வரங்கள் மரங்கள். கொளுத்தும் வெயிலுக்கு பசுமைக் குடையாக இருப்பவை மரங்கள். ஆனால், வளர்ச்சி, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மரங்களை அழித்தொழித்து விட்டோம். சோலைகளாக இருந்த சாலைகளை, பாலைவனமாக உள்ளன. இது வாழ்வாதாரமாக இருக்கும் நம் பசுமை பரப்பை மொட்டையடிக்கும் செயல். ஆனால் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் சாலைகள் விரிவாக்க பணிகளுக்காக மரங்களை வெட்டாமல் வெவ்வேறு இடங்களில் பிடுங்கிய மரங்களை நடவும் செய்தனர்.