மும்பை மட்டுமின்றி புனே உட்பட மற்ற நகரங்களிலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புனேயில் கொட்டித் தீர்த்த கனமழையில் அடுக்குமாடி குடியிருப்பின் வளாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியாகினர். வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டன.