உத்தரகாண்ட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடல் மட்டத்தில் இருந்த 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார். பிரதமர் மோடி, அங்குள்ள குகைக்கோயிலுக்குள் தியானத்தில் நாளை காலைவரை தியானம் மேற்கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரதமர் வருகையையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.