நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடையும் நிலையில் அதிமுக – பாமக இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.