மக்களவைக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்து அடுத்து மோடி தலைமையில் புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்டது. பிரதமர் மோடி அணுசக்தித்துறை, விண்வெளித்துறை, மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். தொடர்ந்து அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ராஜ்நாத் சிங் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார். வெளியுறவு அமைச்சராக ஜெய்ஷங்கர் பொறுப்பேற்றனர். சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்றார்.