கூட்டணி கட்சித் தலைவா்களுடன் மோடி தோ்தல் பிரசாரம்
மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சென்னையை அடுத்த வண்டலூா் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்றனர். அதிமுக சாா்பாக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீா்செல்வம், முதல்வர் பழனிசாமியும், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சா் பொன்.ராதா கிருஷ்ணன், பாமக சாா்பாக கட்சியின் நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதை தொடர்ந்து மோடி தமிழ்நாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும் எனவும், இனி விமான நிலைய அறிவிப்புகள் இனி தமிழிலும் இருக்கும் என்றார்.