தேவையானவை:
வாழைப்பழம் - 1
அன்னாசி - சில துண்டுகள்
ஆப்பிள் - பாதி
தர்பூசணி - 1 துண்டு
சிறிய பப்பாளி பழம் - 1
செய்முறை
பழங்களை ஒரே அளவில் நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
ஒரு சிட்டிகை கருப்பு உப்பு, வறுத்த சீரகத்தூள், சிறிதளவு சாட் மசாலாத்தூள், அரை டீஸ்பூன் தேன் கலந்து மூன்று புதினா இலைகளை நறுக்கிச் சேர்க்கவும்.
இந்த பழ சாட்டை தினமும் காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பு சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள டாக்ஸின்கள் வெளியேறி சருமம் பளபளப்பாகும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருக்க முடியும்.