மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயியிக்கு பாகிஸ்தான் சார்பாக இரங்கள் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு சட்டம் மற்றும் தகவல்துறை அமைச்சர் சையது அலி ஜாஃபா் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்தார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, பாகிஸ்தான் சட்ட மற்றும் தகவல்துறை அமைச்சர் சையது அலி ஜாஃபா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவுக்காக பாகிஸ்தானின் இரங்கலை அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே உடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில், சையது அலி ஜாஃபரும் அதில் பங்கேற்றறார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், அந்நாட்டு நாடாளுமன்றறத்தில் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.