இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய 539 பெண்கள் விண்ணப்பம்

DIN


சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கும் 3 லட்சம் பக்தர்களில் 10 - 50 வயதுடைய 539 பெண் பக்தர்களும் அடங்குவர்.

ஐயப்பனை தரிசிக்கும் போது கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை சபரிமலை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

இதில், வரும் கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சுமார் 3 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

10 - 50 வயதுடைய பெண்களையும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோயிலில் சுவாமியை தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 3,505 பேர் கைது செய்யப்பட்டு 529 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், ஆன்லைனில் 539 பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT