அமலாக்கத் துறை இயக்குநராக அப்பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த முதன்மை சிறப்பு இயக்குநர் எஸ்.கே. மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத் துறை இயக்குநராக இருந்த கர்னல் சிங் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தில்லி வருமான வரித்துறையில் பணிபுரிந்து வந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி எஸ்.கே. மிஸ்ராவை, அமலாக்கத் துறை முதன்மை சிறப்பு இயக்குநராக மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நியமித்தது. மேலும், அமலாக்கத் துறை இயக்குநர் பதவியை கூடுதல் பொறுப்பாக அவரிடம் 3 மாதங்களுக்கு மத்திய அரசு அளித்திருந்தது.