இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள பாஜக எடுத்திருக்கும் அதிரடி வியூகம் பலனளிக்குமா?

ENS


புது தில்லி: மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ள யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி வியூகத்தை பாஜக கையாள திட்டமிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தல் ஜுரத்தில் உள்ளன.

பொதுவாகவே பாஜக தேர்தல் பிரசாரத்தில் மோடிதான் ஹைலைட்டாக இருப்பார். ஒரே நாளில் 5 பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் கூட பங்கேற்பார். ஆனால் இந்த முறை அப்படி இருக்காதாம். அதற்கு உதாரணமாக மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் தேர்தல் பிரசாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வெறும் 4 பேரணிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார். ராஜஸ்தானில் இன்னும் பிரசாரத்துக்கே செல்லவில்லை.

அதாவது, மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் அமித் ஷாவும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அந்தந்த மாநில பாஜக தலைவர்களையும் முன்னிலைப்படுத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

விரைவில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல்களில் மோடியை தீவிரமாக முன்னிலைப்படுத்துவதைத் தவிர்க்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT