ஜிஎஸ்டி எதிர்பார்த்த பலனை அளித்ததா? நாடாளுமன்றத்தில் சிஏஜி விரைவில் அறிக்கை

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) எதிர்பார்த்த பலன்களை அளித்துள்ளதா என்பது குறித்த மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) நாடாளுமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.
ஜிஎஸ்டி எதிர்பார்த்த பலனை அளித்ததா? நாடாளுமன்றத்தில் சிஏஜி விரைவில் அறிக்கை

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) எதிர்பார்த்த பலன்களை அளித்துள்ளதா என்பது குறித்த மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) நாடாளுமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 11-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அப்போது, அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.
சுதந்திர இந்தியாவில் மிக முக்கியமான வரிச் சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்கெனவே அமலில் இருந்த 17 வகையான வரிகளுக்கு ஒரே மாற்றாக ஜிஎஸ்டி அமைந்தது. 
இதில் வியாபாரிகளும், தொழில் துறையினரும் சுட்டிக் காட்டிய குறைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டன. 5,12,18,28 சதவீதம் என நான்கு அடுக்கு வரி விகிதம் உள்ளது. இதில் பல அத்தியாவசியப் பொருள்கள் குறைந்த வரி விகிதத்தில் கொண்டுவரப்பட்டன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களுக்கும், எளிய மக்களின் கைவினைப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தற்காலிகமாக பணவீக்கம் அதிகரித்தாலும், அதன்பிறகு பொருள்களின் விலை குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும். ஜிஎஸ்டி வரியால் பொருள்களின் உற்பத்திச் செலவு குறையும். இதனால் மக்கள் அதிகப் பொருள்களை வாங்கிப் பயனடைய முடியும். இதனால் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து அது முதலீடாக மாறும். நாட்டின் பொருளதாரம் வளர்ச்சி வேகமெடுக்கும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாகும். இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட நன்மைகள், அதன் மூலம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்ததா? என்பது குறித்து சிஏஜி குழு ஆய்வு நடத்தியது. 
இதில் ஜிஎஸ்டி பதிவு, செயல்படுத்தும் உரிமை, கணக்கை உரிய முறையில் தாக்கல் செய்து வரியைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள், ஜிஎஸ்டி தொகுப்பு முறைத் திட்டம், வரி செலுத்துதல் எந்த அளவுக்கு எளிதாக்கப்பட்டுள்ளது, ஜிஎஸ்டி-யால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள், எதிர்காலத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்படும் என்பது உள்ளிட்ட ஜிஎஸ்டி-யின் அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 
முக்கிய நகரங்களில் உள்ள ஜிஎஸ்டி ஆணைய அலுவலகத்துக்கும் சிஏஜி குழுவினர் நேரடியாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். எனினும், ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பான தகவல்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com