இந்தியா

புதுவை நிதித் துறை செயலரின் சுற்றறிக்கை ரத்து: புதிய ஆணையை வெளியிட்டார் நாராயணசாமி

DIN

தன்னிச்சையாக வெளியிடப்பட்ட புதுவை நிதித் துறைச் செயலரின் சுற்றறிக்கையை ரத்து செய்துவிட்டு, புதிய நிலை ஆணையை (ள்ற்ஹய்க்ண்ய்ஞ் ர்ழ்க்ங்ழ்) முதல்வர் நாராயணசாமி சனிக்கிழமை வெளியிட்டார்.
புதுவையில் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு பல மாதங்களாக நிலுவை ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக ரூ. 762 கோடியை நிதிநிலை அறிக்கையில் அரசு ஒதுக்கியது. 
தீபாவளி பண்டிகையையொட்டி, சில மாத ஊதியத்தை பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு வழங்க அரசு முடிவு எடுத்தது. அதன்படி, அந்தக் கோப்பு ஆளுநர் கிரண் பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நிதித் துறை தரப்பில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், கோப்பை ஏற்கவில்லை என்று ஆளுநர் கிரண் பேடி தெரிவித்திருந்தார். 
 இந்த நிலையில், அரசு அதிகாரிகளுக்கு புதிய ஆணை ஒன்றை புதுவை முதல்வர் நாராயணசாமி பிறப்பித்தார்.
அதன் விவரம் வருமாறு: முதல்வர், நிதி அமைச்சர் ஆகியோரின் ஒப்புதல் இல்லாமலேயே செலவின மேலாண்மை குறித்து ஒரு சுற்றறிக்கையை நிதித் துறைச் செயலர் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளார். அதில், நிதி தொடர்பான தற்காலிகச் செலவு, இதர செலவுகளுக்கு மட்டுமே நிதி ஒப்புதல் பகிர்ந்தளிப்பு அதிகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியானதல்ல.
இந்தச் சுற்றறிக்கையின் இரண்டாவது பத்தியானது, 2014-ஆம் ஆண்டு வழங்கிய நிதி பகிர்ந்தளிப்பு ஆணைக்கு எதிரானதாகும்.இது உள்நோக்கமுடையதும், சட்ட விரோதமானதாகும். மேலும், இந்தச் சுற்றறிக்கை மாநில நிதி அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் அனுப்பப்பட்டதாகும். புதுவை அமைச்சரவை, மத்திய உள்துறை அமைச்சகம்,  புதுவை சட்டப்பேரவை ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட நிதிநிலை அறிக்கை செலவினத்தை புதுவையில் உள்ள எந்த ஒரு அதிகாரம் படைத்த தனி நபருக்கும் மாற்றம் செய்வதற்கு அதிகாரம் இல்லை.
நிதித் துறைச் செயலரின் சுற்றறிக்கை அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகும். மேலும், இது நிதித் துறையைக் கவனித்து வரும் முதல்வரின் ஒப்புதலையும் பெறவில்லை. எனவே, நிதித் துறையைக் கவனிக்கும் முதல்வராகிய நான், சுற்றறிக்கையின் இரண்டாவது பத்தி சட்ட விரோதமானது என்றும், அது செல்லத் தக்கதல்ல என்றும் ஆணை பிறப்பித்துள்ளேன். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த ஆணையில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 


கிரண்பேடி எதிர்ப்பு

புதுவை நிதித் துறைச் செயலரின் சுற்றறிக்கைக்கு எதிரான முதல்வர் நாராயணசாமியின் நிலை ஆணை சட்ட விரோதமானது என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
இந்த ஆணையைத் திருத்தி முறைப்படி வெளியிடும்படி முதல்வர் நாராயணசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
புதுவை முதல்வர் நாராயணாமி சனிக்கிழமை வெளியிட்ட நிலை ஆணை சட்ட விரோதமானது. புதுவை யூனியன் பிரதேச அலுவல் விதிகளுக்கு எதிரானது. தனது தவறான நிலை ஆணையைத் திருத்தி வெளியிடும்படி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT