இந்தியா

சந்திரபாபு நாயுடுவும், சோனியா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரமா? காங்கிரஸ் மறுப்பு

DIN


தெலங்கானாவில் வரும் 23-ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்கும் பிரசாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கமாட்டார் என்று மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்சி குண்தியா தெரிவித்தார். 

தெலங்கானாவில் வரும் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தெலங்கானா ராஷ்டிர சமிதியை (டிஆர்எஸ்) எதிர்கொள்ள காங்கிரஸ், பிரஜகுமாரி, தெலுங்கு தேச கட்சி, தெலங்கானா ஜன சமிதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சியுடன் கூட்டணி வைத்தது. 

இதையடுத்து, தெலங்கானா மெட்செல்லில் வரும் 23-ஆம் தேதி நடைபெற இருக்கும் சோனியா காந்தியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒன்றாக பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சோனியா காந்தி பங்கேற்கும் பிரசார மேடையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கமாட்டார் என்று காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ஆர்சி குண்தியா தெரிவித்தார். அதேசமயம், நவம்பர் 28, 29 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பிரசாரங்களில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT