இந்தியா
கேரளாவை காஷ்மீர் போல் இந்துக்கள் அல்லாத மாநிலமாக மாற்ற முயற்சிக்கிறார் முதல்வர்: விஹெச்பி
கேரள மாநிலத்தை அம்மாநில முதல்வர் காஷ்மீர் போல் இந்துக்கள் அல்லாத மாநிலமாக மாற்ற முயற்சிக்கிறார் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தை காஷ்மீர் போல் இந்துக்கள் அல்லாத மாநிலமாக மாற்ற அம்மாநில முதல்வர் முயற்சிக்கிறார் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறுகையில்,
"இந்துக்களின் நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும் அழித்து கேரளாவை காஷ்மீர் போல் இந்துக்கள் அல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் முயற்சிக்கிறார். சபரிமலை விவகாரத்தில் அவருடைய செயல்பாடு இரக்கமற்ற சர்வாதிகாரி போல் உள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதன் பெயரில் அவர் மீண்டும் மீண்டும் இந்துக்களை சித்திரவதை செய்துவருகிறார். பெண்களின் உரிமையை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அவர் மிகக் கொடூரமாக பெண்களை விமரிசிக்கிறார்.
சபரிமலையில் எதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது? அங்கு ஏதேனும் கலவரம் நிகழ்வதற்கான வாய்ப்பு உள்ளதா?" என்றார்.