லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின் பெயர் விரைவில் பிரயாக்ராஜ் என மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ல் தொடங்க உள்ளது. இந்த விழாவினை முன்னிட்டு அலகாபாத் மாநகரின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின் பெயர் விரைவில் பிரயாக்ராஜ் என மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பல்வேறு தரப்பினரிடமும் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அலகாபாத் என்னும் பெயரானது 'பிரயாக்ராஜ்' என மாற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பெயர் மாற்ற அறிவிப்பானது கும்பமேளா தொடங்குவதற்கு முன் வெளியாகும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.